Monday, 7 January 2013

முப்பது வருடத்திற்கு பின் பழைய நண்பர் ஒருவரை முக புத்தகத்தின் மூலம் மீண்டும் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்தேன் .அந்த காலங்களில் வீடு,குடும்பம் அலுவலகம் என்று பல விஷயங்களில் அவர் என்னை ஆலோசனை கேட்பதுண்டு. நான் கூறும்  ஆலோசனைகளை வரவேற்று அதன்படி நடந்து கொண்டதும் உண்டு . இதோ அவரே வந்துவிட்டார் .

"ஹல்லோ சந்துரு எப்படி இருக்கீங்க ;முடிதான் நரைச்சி போச்சி ; மற்றபடி அப்படியேதான் இருக்கீங்க ". அவர்.

"நீ தான் ரொம்ப ஆளே மாறிட்டே "   நான் .

சிற்றுண்டி காபி ஆயிற்று .

"சரி .விஷயத்துக்கு வருகிறேன் .எனக்கு ரொம்ப நாளா ஒரு விஷயம் புரியலே ;நீ தாம்பா பதில் சொல்லணும் "

"எனக்கும் எங்க அப்பாவிற்கும் 30 வயசு வித்தியாசம்.  ஆனா 90% எல்லா  விஷயங்களிலும் நானும் அவரும் ஒத்துப் போகிறோம் ."

"நல்லது தானே ;இதில் என்னப்பா பிரச்சினை "

"இருப்பா ,நான் இன்னும் முடிக்கலே ; இப்போ எனக்கும் என் மகனுக்கும் அதே  30 வயசுதான் வித்தியாசம்; ஆனா அவனுக்கும் எனக்கும் எந்த  விஷயத்திலும் 10% கூட ஒத்துப் போவதில்லை; இது ஏன் ?"

"எனக்கும்  தெரியலேயப்பா !"

"உனக்குத்தான் முகப்புதகத்திலே 120 நண்பர்கள் இருக்காங்களே ; முகப்புதகத்திலே போடு ; யாராவது பதில் சொல்றாங்களா பார்ப்போம் "

"போட்டுட்டேன் ; ஹல்லோ என்ன LIKE பண்ணிட்டு கிழே போயிட்டிங்க ; ஏதாவது  COMMENT கொடுங்க. நான் பதில் சொல்லணும் .







No comments:

Post a Comment