Wednesday, 18 July 2012

சதாரா சங்கரா சந்திரசேகரா  

இது  1979 - 80 களில் நடந்த இதுவரை வெளிவராத ,செய்தி. அவர் பெயரை 'சு ..' எனறு குறிப்பிடுகின்றேன் 
 "பெரியவா ,பெல்காமில் இருந்து  'சு ..' உங்களை தரிசிக்க வந்திருக்கிறார் " பெரியவாளிடம் பணிவிடை  செய்யும் ஓர்  அன்பர் .
" ம் ம்" பெரியவா .
 " நீ, அடிக்கடி பெல்காமில் இருந்து வருகிறாயே ,உனக்கு வந்து போக எவ்ளோ சார்ஜ் ஆகும் "பெரியவா .  
"நான் ரயில்வேயில் வேலை செய்வதால் எனக்கு பாஸ் இருக்கிறது . ஆகவே free ஆக வந்து போகலாம் ." 'சு ..' 
"ஒரு பாஸில் எத்தனை தடவை வந்து போகலாம் ?"பெரியவா .  
" அப்படி இல்லை,பெரியவா , ஒரு பாஸ் 4 மாதம் செல்லுபடியாகும் .TTE  கை எழுத்து  போடலைனா போய் போய் வரலாம் "   'சு ..' 
"TTE   கை எழுத்து  போட மாட்டாளா?" பெரியவா  .
எல்லாரும் தெரிந்தவா .அதானாலே போடமாட்டா .Squad  TTE வந்தாதான்  போடுவா "  'சு ..' 
" அப்போ reservation பண்ணா எப்படி?"பெரியவா .
 "reservation பண்ணா அந்த journey யோட பாஸ் validity முடிந்து போயிடும்.      திரும்ப உபயோகம் பண்ண முடியாது ."    'சு ..' 
"அப்ப இந்த தப்பை இனிமே நீ பண்ணாதே .நீ அங்கிருந்தே என்னை நினைத்து கொள் "  பெரியவா.

ஆஹா என்ன ஒரு janam பெரியவாளுக்கு. ரயில் பற்றியும் பாஸ் பற்றியும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார். 
நான் அப்போது  சதாராவில் ரயில்வேயில் booking clerk ஆக இருந்தேன் . 










No comments:

Post a Comment