Sunday, 25 October 2015

ஆசிரியரை பார்த்து மாணவன் ஒருவன் ஐயா நீங்கள் இறைவனை காணலாம் என்கிறீர்கள். என் எதிரில் இறைவனைக் காட்டுங்கள் அப்பொழுதுதான் நான் நம்புவேன் என்றான்.

என்னுடன் வா உனக்குக் காட்டுகிறேன் என்ற ஆசிரியர் தன்னுடன் அவனை அழைத்துச் சென்றார்.


ஆற்றங்கரையை  அடைந்த இருவரும் நீரில் இறங்கினார்கள். திடீரென்று அவர் மாணவனுடைய தலையை நீருக்குள் அமிழ்த்தினார். மூச்சுத் திணறிய அவன் துடிதுடித்தான். சில வினாடிகள் சென்றதும் அவர் அவனை விட்டார்.




நீருக்கு மேலே வந்த அவன் பரபரப்புடன் மூச்சை இழுத்துவிட்டான்.

எப்படி இருந்தது? என்று கேட்டார் அவர்.


மூச்சுவிட வேண்டும் என்று நான் துடிதுடித்துவிட்டேன் என்றான் அவன்.

நீருக்குள் இருந்தபோது முச்சுவிட எப்படி துடித்தாயோ அப்படிப்பட்ட உயிர்துடிப்பு இறைவனைக் காணவேண்டும் என்று உன்னுள் எழ வேண்டும். அப்படி எழுந்தால் நீயும் இறைவனைக்காணலாம் என்றார் அவர்.


Thursday, 18 June 2015

பண்டரி யாத்ரா

பண்டரிபுரம் சென்ற நாங்கள் ஜூன் 12 ,2015 இரவு 8 to 10 ரெங்க 
மண்டபத்தில் பஜனை செய்ய online லே அனுமதி வாங்கியிருந்தோம் .                                                                                                    
அதன்படி ஸ்ரீ ராமமூர்த்தி பாகவதர் மற்றும் ஸ்ரீ ராதாகிருஷ்ண பாகவதர் முன்னின்று வாத்திய கோஷ்டி சகிதம் பஜனை இனிதே நடந்தது . அதற்கு பின் விட்டலனை தரிசித்து தங்கும் இடம் வரும் நேரம் எல்லம்மா என்ற மாம்பாக்கம் கிராம ஸ்த்ரி தெரியாமல் ஒரு நாய் மேல் கால் வைத்துவிட அது அவரை கடிக்க அந்த நேரம் மருத்துவ உதவி கிடைக்காமல் மஞ்சள் தூள் வைத்து தற்காலிக சிகிச்சை செய்யப்பட்டது .பொதுவாக மகாராஷ்டிராவில் டாக்டரை காலை  11 மணிக்குதான் பார்க்க முடியும் .மேலும் கூட வந்தவர்களில் யாருக்கும் மராட்டி தெரியாததால் என்னிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மணி நேரம் அலைந்து ஒரு டாக்டரை கண்டுபிடித்து அவருக்கு தடுப்பூசி போட்டு தங்கி இருந்த இடம் அழைத்து வந்தேன் .கிராமத்து மக்கள் வாழ்த்தினர்.

Monday, 1 June 2015

பால்ய விவாஹ காலத்தில் பெண்கள் தப்பிப் போவதற்கு ரொம்பவும் 

குறைச்சலாகதான் chance இருந்தது. ஒரு பெண்ணுக்குத் தாம்பத்ய 

எண்ணம் வருகிறபோதே அவளுக்குப் பதி என்ற ஒருத்தன் 
இருந்துவிட்டதால், அவனிடம் மட்டுமே 

அவளுடைய மனஸ் போயிற்று. இந்த எண்ணம் ஏற்பட்ட வயஸுக்கப்புறமும் 

கலியாணமாகாமல் இருப்பது என்று ஏற்பட்டால், அப்போது மனஸ் பல
 தினுஸாகப் 

போகிறது; சித்த விகாரம் ஏற்படுகிறது. ஆனால் இப்படி சாரதாச் சட்டத்திலிருந்து 

ராஜாங்க ரீதியாகவே ஏற்பட்டு விட்டதால், எங்கள் கையைக் கட்டி போட்டுவிட்ட 

மாதிரிதான் ஆகிவிட்டது. ஆனாலும் நினைத்து நினைத்து எத்தனையோ 
சட்டங்களை 

மாற்றுகிற மாதிரி, இதையும் மாற்றுவதற்கு அவர்களை (ஸர்க்காரை)த் 
தூண்டிவிடுகிற 

ரீதியில் public opinion-‍ஐ create பண்ண [வெகு ஜன அபிப்ராயத்தை உண்டு பண்ணி] 

முடியுமா என்பதால்தான், இந்த விஷயத்தில் நான் முழுக்கக் கை கழுவாமல் எடுத்துச் 

சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பெண்களுடைய மனோபாவம், பெண்ணைப் 

பெற்றவர்களுடைய மனோபாவம் எல்லாமே இப்போது விபரீதமாக மாறி, 

கல்யாணத்துக்கு முயற்சி பண்ணாமல் காலேஜில் co-education முறையில் [ஆண் 

மாணவர்களோடு கூட்டுப் படிப்பு] படிப்பது, அப்புறம் புருஷர்களோடு உத்யோகம் 

பண்ணுவது என்றெல்லாம் ஆகி வருகிறதைப் பார்க்கிற போது, உள்ளுக்குள்ளே ரத்தக் 

கண்ணீர் விட்டுக் கொள்வதைத் தவிர, ஏதாவது பண்ணமுடியுமா என்று நம்பிக்கை 

போய்க் கொண்டுதான் இருக்கிறது.( மகாபெரியவா " தெய்வத்தின் குரல்") 





Wednesday, 25 February 2015

அண்ணா நகர் டவர் பார்க் ;அந்தி சாயும் நேரம்

அறுபத்துஎட்டு வயசுப்பாட்டி மடிசார் புடவையில்
"என்ன காமுப்பாட்டி சௌக்கியமா ? என்னை
தெரியறதோ ?"
"சரியா தெரியல்லை நங்கநல்லூர் கோமு
மாதிரி இருக்கே ;கண்லே காட்ராக்ட்"

"இல்லை பாட்டி நங்கவரம் பாகீ ;எவ்ளோ வருஷம்
ஆச்சு பாத்து ;இங்கே எப்படி ?"

"ஆமாண்டி கிராமத்துலே எல்லாத்தையும் வித்து
பட்டணம் வந்து வருஷம் பாத்து ஆறது "




"நானும் U.S. போய் பன்னேண்டு வருஷம் ஆச்சு ;
மாமனார் தவறிட்டார் .இங்கே மச்சினர் ஆத்திலே
நேத்திக்கு சுபம் .அடுத்த வாரம் கிளம்பறேன் .இங்கே
தனியா உக்காந்துண்டு என்ன பண்றேள் ?"

"ஆமாண்டி ;இங்கே எதிர்க்க தான் ஆஹம். B.P.,Sugar
டாக்டர் வாக் போக சொன்னார் ;சாயங்காலம் செத்த
இப்படி போனா ஆறு மணிக்கு பக்கத்து ஐயப்பன்
கோயில் தர்சனம் பண்ணிண்டு போக சரியாயிருக்கும் ."

"பேரன் பேத்தி எல்லாம் ?"

"பேரன் ரெண்டு பெரும் U.S."பேத்திக்கு படிப்பு
போதலை "

"தாத்தா போன வருஷம் கணக்கை முடிச்சுண்டு
போய்ட்டார் .அவர் வச்சிண்டு இருந்த பெரிய ஆபீஸ்
ரூம் காலி ஆச்சு "

"சரி "

"அபி B.A. முடிச்சா .என்னமோ டிப்ளமா பண்ணா .என்னமோ
beauty parlour course,facial அப்படின்னு பண்ணா "

"ஹும்"

"இப்ப தாத்தாவோட ஆபீஸ் ரூம் பூரா ஏ.சி.பண்ணி
என்னவோ SPA வோ என்னவோ சொல்றாளே அது
ஆரம்பிச்சிருக்கா ; இந்த படி மேலே நின்னு பாரு பெரிய
போர்டு தெரியும் ;மொதல்லே இவளே பண்ணா ;
இப்ப ரெண்டு பொண்களை போட்ருக்கா "

"போன் லே appointment பிக்ஸ் பண்ணி ஸ்லாட்
குடுத்து பணம் வாங்கறதை இப்ப பாத்துகரா"

"அதில்லை பாட்டி ஆச்சாரமான சாஸ்திரி ஆத்து
குடும்பம் ;இப்ப ஆத்து உள்ளயே சலூன் னா?"

"என்ன பண்றதுடி ;இப்ப புழப்பை தேடி நீ கடல் தாண்டி
போலையா? ஏதோ இதெல்லாம் பாக்காமா அவர் போய்
சேர்ந்துட்டார் ;நேக்குதான் வேளைவல்லை "

"நான் வோண்ணா ரோட்டை கிராஸ் பண்ணி உடவா?"

"வாணான்டி ;இன்னிக்கு பண்ணிட்டா ஆச்சா ;நான்
பாத்துக்கறேன் ;அப்புறம் ஆத்துலே வந்து ஒரு காபி
சாப்ட்டு போடி "