Sunday, 3 March 2013

யதார்த்தமான சொந்த பந்தங்கள் :

"சொந்த பந்தங்கள்" என்பதற்கு சரியான விளக்கம் சொல்லுங்க "

" இப்ப உன்கிட்டே இருக்கிற இந்த பேனா யாருக்கு சொந்தம் ? சொல்லு "

"எனக்கு சொந்தம்"

"ரைட் ; நீ அதை வேணுனா வைச்சுக்கலாம் ; இல்லேன்னா தூக்கி தூர போட்டுறலாம் "

"ஆமா "

"அதே போல "சொந்தங்களை"  நீ  வேணுனா வைச்சுக்கலாம் ; இல்லேன்னா தூக்கி தூர போட்டுறலாம் "

"புரியலை ;ஏதாவது உதாரணம்  சொல்லுங்க"

"அம்மா, அப்பா,தாத்தா ,பாட்டி ,மாமா ,மாமி ,மச்சான் இப்படி எவ்வளவோ சொல்லலாம் "

நான் நிமர்ந்து அமர்ந்தேன் . அந்த பூங்காவில் எனது பின்பக்க இருக்கையில் ஒரு முதியவருக்கும் இளைஞருக்கும் நடுவே நடந்த உரையாடல் தான் இது.

"சரி அப்ப  "பந்தம் " னா என்ன ?" இளசு

"ஓ இதை  அப்படி தூக்கி போட முடியாது "பெருசு .

"உதாரணம் "

"தான்  பெற்ற குழந்தைகள் ,தன் பேர குழந்தைகள் இப்படி "

"ஓ  அதான் பத்து மாத  பந்தம் என்கிறார்களோ "

இப்போது அந்த இளைஞனுக்கு  அலைபேசியில் அழைப்பு வர அவன் எழுந்து போனான் .

நான் ஆர்வத்துடன் பெரியவரை அணுகி " உங்களுக்கும் அந்த  இளைஞனுக்கும் என்ன உறவு" என்று கேட்டேன் .

"அவனுக்கு நான் சொந்தம் ; எனக்கு அவன் பந்தம் . புரிகிறதா ?" என்றார் .

எனக்கு புரிந்தது.உங்களுக்கு ? புரியலேன்னா ஆரம்பத்திலிருந்து படியுங்கள் .




















Mathrupanchakam tamil

ஒரு அப்பாவியின் யதார்த்தம் :

"சார்  "சமரச சன்மார்க்கம் " அப்படின்னா என்ன? "

"சரி,உங்களுக்கு புரியற மாதிரி சொல்றேன் ;"மார்க்கம்" ன்னா  என்ன ?"

"மார்க்கம்"ன்னா  "வழி "ன்னு சொல்லலாம் "

"நல்லது "சன்" அப்படின்னா என்ன? "

"சூரியன் "

"வேற "

"மகன்" ன்னு சொல்லலாம் "

"அப்ப ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு மகன் சொல்படி கேட்டு அவன் வழியில் போவதைத்தான் "சன்மார்க்கம்"
என்று சொல்கிறோம் ;புரிகிறதா ?"

"கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு ;சரி  "சமரச சன்மார்க்கம் " அப்படின்னா ?"

"ஓ ! அதுவா , எந்த நிலையிலும் அவனுடன்" சமரசமா " போகணும்; அதுக்குதான் அப்படி சொல்றா ;என்ன புரிந்ததா ?"

"சார்; அவனோட  சமரசமா போறனோ இல்லையோ முதல்லே உங்களோட சமரசமா போய்டுறேன் ;ஆளை விடுங்க "



Friday, 1 March 2013

வளமையான மாமியார்
வந்து சேர்ந்தாள் வது
வலுவான கணவன்
வசந்த காலம் என்றனர் ;

வயதனாள் தாய்
வாய் துடுக்கனாள் அவள்
வலுவிழந்தான் அவன்
வந்தது கலி காலம் என்பர்

--லதிகர்