Thursday, 18 June 2015

பண்டரி யாத்ரா

பண்டரிபுரம் சென்ற நாங்கள் ஜூன் 12 ,2015 இரவு 8 to 10 ரெங்க 
மண்டபத்தில் பஜனை செய்ய online லே அனுமதி வாங்கியிருந்தோம் .                                                                                                    
அதன்படி ஸ்ரீ ராமமூர்த்தி பாகவதர் மற்றும் ஸ்ரீ ராதாகிருஷ்ண பாகவதர் முன்னின்று வாத்திய கோஷ்டி சகிதம் பஜனை இனிதே நடந்தது . அதற்கு பின் விட்டலனை தரிசித்து தங்கும் இடம் வரும் நேரம் எல்லம்மா என்ற மாம்பாக்கம் கிராம ஸ்த்ரி தெரியாமல் ஒரு நாய் மேல் கால் வைத்துவிட அது அவரை கடிக்க அந்த நேரம் மருத்துவ உதவி கிடைக்காமல் மஞ்சள் தூள் வைத்து தற்காலிக சிகிச்சை செய்யப்பட்டது .பொதுவாக மகாராஷ்டிராவில் டாக்டரை காலை  11 மணிக்குதான் பார்க்க முடியும் .மேலும் கூட வந்தவர்களில் யாருக்கும் மராட்டி தெரியாததால் என்னிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மணி நேரம் அலைந்து ஒரு டாக்டரை கண்டுபிடித்து அவருக்கு தடுப்பூசி போட்டு தங்கி இருந்த இடம் அழைத்து வந்தேன் .கிராமத்து மக்கள் வாழ்த்தினர்.

2 comments: