Monday, 1 June 2015

பால்ய விவாஹ காலத்தில் பெண்கள் தப்பிப் போவதற்கு ரொம்பவும் 

குறைச்சலாகதான் chance இருந்தது. ஒரு பெண்ணுக்குத் தாம்பத்ய 

எண்ணம் வருகிறபோதே அவளுக்குப் பதி என்ற ஒருத்தன் 
இருந்துவிட்டதால், அவனிடம் மட்டுமே 

அவளுடைய மனஸ் போயிற்று. இந்த எண்ணம் ஏற்பட்ட வயஸுக்கப்புறமும் 

கலியாணமாகாமல் இருப்பது என்று ஏற்பட்டால், அப்போது மனஸ் பல
 தினுஸாகப் 

போகிறது; சித்த விகாரம் ஏற்படுகிறது. ஆனால் இப்படி சாரதாச் சட்டத்திலிருந்து 

ராஜாங்க ரீதியாகவே ஏற்பட்டு விட்டதால், எங்கள் கையைக் கட்டி போட்டுவிட்ட 

மாதிரிதான் ஆகிவிட்டது. ஆனாலும் நினைத்து நினைத்து எத்தனையோ 
சட்டங்களை 

மாற்றுகிற மாதிரி, இதையும் மாற்றுவதற்கு அவர்களை (ஸர்க்காரை)த் 
தூண்டிவிடுகிற 

ரீதியில் public opinion-‍ஐ create பண்ண [வெகு ஜன அபிப்ராயத்தை உண்டு பண்ணி] 

முடியுமா என்பதால்தான், இந்த விஷயத்தில் நான் முழுக்கக் கை கழுவாமல் எடுத்துச் 

சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பெண்களுடைய மனோபாவம், பெண்ணைப் 

பெற்றவர்களுடைய மனோபாவம் எல்லாமே இப்போது விபரீதமாக மாறி, 

கல்யாணத்துக்கு முயற்சி பண்ணாமல் காலேஜில் co-education முறையில் [ஆண் 

மாணவர்களோடு கூட்டுப் படிப்பு] படிப்பது, அப்புறம் புருஷர்களோடு உத்யோகம் 

பண்ணுவது என்றெல்லாம் ஆகி வருகிறதைப் பார்க்கிற போது, உள்ளுக்குள்ளே ரத்தக் 

கண்ணீர் விட்டுக் கொள்வதைத் தவிர, ஏதாவது பண்ணமுடியுமா என்று நம்பிக்கை 

போய்க் கொண்டுதான் இருக்கிறது.( மகாபெரியவா " தெய்வத்தின் குரல்") 





1 comment: